Show all

கடன் அட்டை பரிவர்த்தனைகளுக்கு சேவை மற்றும் உபரி கட்டணம் ரத்து

கடன் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு அட்டை பரிவர்த்தனைகளுக்கு வசூலிக்கப்படும் சேவை மற்றும் உபரி கட்டணத்தை ரத்து செய்ய நடுவண் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற நடுவண் அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது. ரொக்க பரிவர்த்தனைகளை குறைத்து வங்கி அட்டைகளைப் பயன்படுத்தும் நடைமுறையை அதிகரிப்பதற்காக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுவதாக நடுவண் அரசு தெரிவித்துள்ளது. மின்னனு முறையில் நடத்தப்படும் பண பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும், வரி ஏய்ப்பை தவிக்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளை வங்கி அட்டைகள் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்ற பரிந்துறைக்கும், கடன் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு அட்டை மூலமாக பொருட்களை வாங்கும்போது, நுகர்வோருக்கு வழங்கப்படும் தள்ளபடி விகிதத்தை மாற்றி அமைப்பதற்கும் நடுவண் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ரொக்கமாக பணம் செலுத்துவதற்கு பதிலாக, கடன் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு அட்டைகளை பயன்படுத்தும் போது, அதற்காக சேவை கட்டணம், உபரி கட்டணம், சிறப்பு வசதி கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதனால் ரொக்கப் பரிவர்த்தனைகளையே மக்கள் அதிக அளவில் மேற்கொள்ளும் நிலை தற்போது உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.