07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒயர்சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு மசோதா ஏன் என்பதற்கான பட்டியல் ஏதாவது உண்டா? இடஒதுக்கீடு போராடி பெறப்பட்டது எதற்காக என்பதில் மாதிரிக்கு ஒரு பட்டியல்- இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் கண்டறியப்பட்ட முதன்மையான தீண்டாமை வடிவங்கள் 1.பொதுப்பதையில் நடக்க முடியாமை 2.செருப்பு, போட்டு நடக்க முடியாமை 3.மிதிவண்டியில் செல்ல முடியாமை 4.தோளில் துண்டு போட முடியாமை 5.வேட்டியை மடித்துக்கட்டி நடக்க முடியாமை. 6.பாலிஸ்டர் வேட்ட கட்ட முடியாமை. 7.தலையில் தலைப்பாகை கட்ட முடியாமை 8.முகத்தில் அரும்பு மீசை வைக்க முடியாமை. 9.துணிகள் தேய்ப்பு செய்து கொடுக்காமை. 10.துணிகள் சலவைச் செய்து கொடுக்காமை. 11.சில சலவை நிலையங்களில் தலித்துகளுக்கு தனி அலமாரி (இரட்டை அலமாரி) 12.சலூன்களில் முடிவெட்ட முடியாமை. 13.சில சலூன்களில் தலித்துகளுக்கு தனியான சேர் (இரட்டை சேர்) 14.தேநீர் கடைகளில் இரட்டை குவளை 15.உணவகங்களில் தலித்துக்கள் தரையில் அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். 16.சில கிராமங்களில் தலித் உட்பிரிவு வாரியாக 4 குவளைகள். 17.தேநீர் கடைகளில் பெஞ்சுகளில் உட்கார முடியாமை. 18.தரையில் குதிக்காலில் உட்கார்ந்து மட்டுமே தேநீர் அருந்துவது. 19.தேநீர்க் கடைகளில் சிரட்டைகளில் தேநீர் கொடுப்பது. 20.தாகத்தால் தண்ணீர் கேட்கும் தலித்துகளுக்கு குவளைகளில் தண்ணீர் தராமல் கைகளை ஏந்தி குடிக்க வைப்பது. 21.பொதுக் குழாய்களில் தண்ணீர் எடுக்க முடியாமை. 22.சில கிராமங்களில் தண்ணீர் எடுக்க தனியாக நேரம் ஒதுக்குவது 23.திருவிழா காலத்தில் தலித்துக்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது. 24.கிராமங்களில் தலித் அதிகாரிகள் தலைமை தாங்கும் விழாக்கள் புறக்கணிப்பு. 25.குளங்களில் குளிக்க முடியாமை. 26.சில குளங்களில் தலித்துகளுக்கு தனிப் படித்துறை 27.ஆலயங்களில் நுழைய அனுமதி மறுப்பு 28.திருவிழாக்களில் தலித் தெருக்களுக்கு சப்பரம் வராது 29.ஆலய மண்டகப்படி தலித்துகளுக்கு கிடையாது 30.ஆயலங்களில் தலித்துகளின் தாம்பூலத்தை தண்ணீர் தெளித்து எடுப்பது 31.ஆலயங்களில் தலித்துகளுக்கு வழிபட தனியான இடம் (கிறித்துவ தேவாலயங்களிலும் கூட) 32.பொது மயான உரிமை இல்லை. 33.பொது மயானத்தில் சாதி வாரியாக இட ஒதுக்கீடு. 34.தலித்துகளுக்கு எனத் தனி மயானம் 35.தனி மயானம் இருந்தாலும் மயானத்திற்கு செல்ல பொதுப் பாதை மறுப்பு. 36.கிராமப் பஞ்சாயத்து தொலைக்காட்சிகளை தலித்துக்கள் பார்க்கக் கூடாது. 37.தலித்துகளுக்கு தனியான பொது விநியோகக் கடைகள். 38.தலித்துக்கள் ஆடு, மாடு வளர்க்கக் கூடாது. 39.பொது விநியோகக் கடைகளில் தலித்துகளுக்கு சில நாட்கள் மட்டும் ஒதுக்குவது 40.கிராம பொது மேடைகளில் தலித்துக்கள் பேச, பாட முடியாது. 41.சில கிராமங்களில் தபால்காரர்கள் தலித்துகளின் வீடுகளுக்கு தபால் கொடுப்பதில்லை (சொல்லியனுப்பினால் வந்து வாங்கிச் செல்ல வேண்டும்) 42.சில கிராமங்களில் தலித்துகள் ஆண் நாய் வளர்க்கக் கூடாது. 43.கோவில் திருவிழாக் காலங்களில் ஆதிக்க சக்திகளுக்கு (பழைய ஆண்டைகளில் வாரிசுகள்) தலித்துகள் ஆடுகள் இலவசமாகக் கொடுப்பது. 44.கோவில் திருவிழா காலத்தில் கையில் காப்பு கட்டிய பிறகு தலித்துக்கள் முகத்தில் முழிக்கக் கூடாது. 45.செத்த விலங்குகளை அப்புறப்படுத்தக் கட்டாயப்படுத்துவது. 46.மயான வேலைகளைச் செய்யுமாறு கட்டாயப்படுத்துவது. 47.பறையடிக்குமாறு கட்டாயப்படுத்துவது. 48.பேருந்து நிறுத்த நிழற்குடையில் தலித்துக்கள் உட்கார முடியாது. 49.மரணம் நேர்ந்தாலும் அக்குடும்பத்தின் உறவினர்களுக்கு தகவல் சொல்லிக் கட்டாயப்படுத்துவது (பஸ் கட்டணம் மட்டும் தருவார்கள் - உணவு கொடுத்தால் தான் சாப்பிட முடியும்) 50.ஆதிக்க சக்திகளின் குடும்பத்திற்கு இலவசமாக உடலுறுப்புக் கொடுப்பது (மனம் இருந்தால் உடனடி கிடைக்கும்). 51.திருமணங்களில் பொதுப் பந்திகளில் உணவு அருந்த முடியாது. 52.தனியார் திருமண மண்படங்களை தலித்துகளுக்கு வாடகைக்கு தர மாட்டார்கள். 53.வசதி படைத்தவர்களாக இருந்தாலும் நகர்புறங்களில் சிலவற்றில் தலித்துகளுக்கு வாடகை வீடு கிடைக்காது. 54.கிராமப்புறங்களிலும் தலித்துகள் வாழ ஊருக்கு வெளியே தனியாக சேரிகள் தான். 55.பெயர்களில் மரியாதையானப் பகுதியை வெட்டி விடுவது (மாடகாரியை மாடர், முனியசாமி முலியர்) 56.மலம் சுமக்க கட்டாயப்படுத்துவது. 57.பள்ளிக் கூடங்களில் தலித் (அருந்ததியர்) மாணவர்களை கழிப்பிடம் சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்துவது. 58.அகவை முதிர்ந்த பெரியவர்களையும் ஆதிக்க சாதி சிறுவர்கள் பெயர் சொல்லியும், வாடா, போடா என்றும் அழைப்பது. 59.தனியார் கல்லூரிகளில் தலித்துக்களை நிர்வாகப் பிரிவில் நியமனம் செய்ய மாட்டார்கள். 60.சில பள்ளிகளில் தலித் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. 61.தலித் குடியிருப்புகளிலிருந்து பொதுத் தெருவுக்கு செல்ல முடியாமல் தடுப்புச் சுவர் கட்டுவது (உத்தபுரம் சுவர் 600 மீட்டர்). 62.கிராமங்களில் - சில நகரங்களில் பொதுத்தெருவிலிருந்து தலித் தெருவிற்கு நுழைய முடியாதபடி சுவர்கள் கட்டப்பட்டிருப்பது (வளைவு) இதர ஜாதி தெருக்களில் இப்படி வளைவு இருக்காது. 63.அரசாங்கமே துப்புறவுப் பணியாளர்களாக தலித் (அருந்தியர்களை) மட்டுமே நியமனம் செய்வது. 64.அலுவலகங்களில் தலித் பிரிவினருக்கு காட்டுப்படு தீண்டாமை - குறிப்பாக சுகாதாரப் பணியாளர்கள். 65.கூலி வேலை செய்யும் தலித்துக்கள் உணவு நேரங்களில் அவர்களே தட்டுக் கொண்டு வரவேண்டும். 66.தலித் மாணவர்களை ஆசிரியர்கள் பாரபட்சமாக நடத்துவது. 67.பொது இடத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் தலித் தபால்காரரை போட அனுமதிக்காதது (தூத்துக்குடி மாவட்டம்). 68.பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்து திருப்பித் தர மறுப்பது - 13 லட்சம் ஏக்கர். 69.தலித்துகளின் ஊராட்சிகளை போதுமான நிதி ஒதுக்காமல் அரசு நிர்வாகமே புறக்கணிப்பது. 70.தலித் உள்ளாட்சி பிரதிநிதிகளை செயல்பட விடாமல் தடுப்பது. 71.கிராமப் பொதுச் சொத்தில் தலித்துக்களுக்கு பங்கு கிடையாது. 72.புரவி எடுப்பு விழாவில் தலித் மக்கள் புறக்கணிக்கப்படுவது. 73.மதம் மாறிய பிறகும் தலித் மக்களுக்கு எதிரான பாகுபாடுகள் மாற வில்லை என்பதற்கு அடையாளமாக காஞ்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தில் உள்ள ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் ஆதி திராவிட அருந்ததிய கிருத்துவர்கள் நேர் வாசல் வழியாக நுழைவதற்கு அனுமதி மறுப்பு. 74.ஆதிக்க சாதியினரின் வன்கொடுமை பின்புலத்தில், தலித் மாணவர்களுக்காக என தனிப் பள்ளி அமைக்க வேண்டிய அவசியம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,039.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.