03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஷ்மீரில் தாக்குதல் நடத்தப் போவதாக 2 நாட்களுக்கு முன்பே பயங்கரவாதிகள் தெனாவெட்டுக் காணொளி விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பாக்கிஸ்தானைச் சேர்ந்த ஜெய்சி இ முகம்மது பயங்கரவாத அமைப்பு, தாக்குதல் தொடர்பாக 2 நாட்களுக்கு முன் காணொளி ஒன்றை இயங்கலையில் பதிவேற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த காணொளியில், வெடிமருந்துகள் நிரப்பிய வாகனத்தை கொண்டு மோதி, தாக்குதல் நடத்த உள்ளதாக காட்டப்பட்டுள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தானில் இந்த தாக்குதல் நடப்பது போன்று சித்தரிக்கப்பட்டு, காணொளி வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குற்றவியல் புலனாய்வு பிரிவினர், காஷ்மீர் காவல்துறையினருக்கு இந்தக் காணொளியை அனுப்பியதாகவும், இது போன்ற தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக புலனாய்வு அமைப்புக்கள் கூறுவதாகவும் தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது. இருப்பினும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல், அலட்சியமாக இருந்ததாலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,064.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.