Show all

நல்ல முடிவு சாய்பல்லவி! விசிறிகளை நெளிய வைக்க விரும்பவில்லை என்கிறார் சாய்பல்லவி

13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிப் படங்களிலும்.

நான் படங்களில் நடிப்பதற்காக மருத்துவர் பணியை விட்டுவிட்டு வந்துள்ளேன். அதனால் அதை நியாயப்படுத்தும் வகையில் நான் நடிக்கும் கதாபாத்திரங்கள் இருக்க வேண்டும். 

அதேபோல் என் படத்தை, மொத்த குடும்பமும் பார்க்க வேண்டும். அரைகுறை ஆடை அணிந்து நடிக்க மாட்டேன்.  மேலும்; முத்;தக் காட்சிகள் போன்ற காட்சிகளில் நடித்து அவர்களை நெளிய வைக்க விரும்பவில்லை என தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

நான் மருத்துவத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளேன். அரசியலில் யாருடைய மனமும் புண்படாமல் பேசுவேன். நான் நீட் இல்லாத காலத்தில் எப்படியோ மருத்துவம் படித்து விட்டேன். அதில் நான் வெல்ல முடியாது என்று அரசியலுக்கு வந்திருக்கிறேன், என்றெல்லாம் நீங்கள் நினைத்து விடாதபடி இனி அரசியலில் கண்ணியமாகப் பேசப் போகிறேன் என்று தமிழிசை முடிவெடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,014.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.