Show all

மோடி மாநிலத்தில் மட்டும் அள்ளக் குறையாமல் அமுத சுரபியாய் பழைய ரூபாய்தாள்கள்! குஜராத்தில் 3.5 கோடி பறிமுதல்

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: குஜராத் மாநிலத்தில் ரூ.3.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி பகுதியை சேர்ந்த பிலிமோரா என்ற கிராமத்தில் ரூ.3.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் தாள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ளனர். 

அவர்களிடம் இருந்து ஆயிரம் மதிப்பிலான 13 ஆயிரத்து 432 ரூபாய் தாள்கள் மற்றும் ஐநூறு மதிப்பிலான 43 ஆயிரத்து 300 தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

என்னத்தே விசாரணை, என்னத்தே செஞ்சு, என்னத்தே வெளங்கப் போவுது நாடு! என்று மக்கள் புலம்பிக் கொண்டே யிருக்க வேண்டியதுதான். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,060. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.