Show all

மோடியின் இந்தியாவில் வாக்கு பதிவு இயந்திரங்களுக்கு மர்மமான சக்தி- ராகுல் காந்தி காணொளி தீயாய் இணையத்தில்

22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடியின் இந்தியாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மர்மமான சக்தி உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநில தேர்தல்கள் முடிவடைந்தன.

வாக்குப் பதிவு இயந்திரங்களை மக்கள் நம்பிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக, வாக்கு பதிவு இயந்திரங்களை எப்போது பயன் படுத்த வேண்டும், எப்படிப் பயன் படுத்த வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்துக் கொண்டு முறையாகப் பயன் படுத்திக் கொண்டிருக்கிறது பாஜக. நாடளுமன்றத் தேர்தலுக்கு முன் எதிர்கட்சிகளுக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டு, நாடளுமன்றத்தில் வாக்குச் சீட்டுமுறை கொண்டு வரப் பட்டாலன்றி, இந்தியாவை பாஜகவிடம் இருந்து காப்பாற்ற முடியாமலே போய்விடும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,995.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.