Show all

இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், கல்லூரி மாணவர் அடித்து கொல்லப்பட்டார்.

இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், கல்லூரி மாணவர் அடித்து கொல்லப்பட்டார்.

ஹரியானா மாநிலம் குர்கான் சுபாஷ் நகர் பகுதியில் இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், கல்லூரி மாணவர் அடித்துக் கொல்லப்பட்டார்.

ஹரியானா மாநிலம், குர்கான், சுபாஷ் நகர் பகுதியில்இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர் ரோஹித் என்பவர் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, அங்கு வந்த மற்றொரு தரப்பினருடன் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், ரோஹித் மற்றும் அவரது நண்பர்கள், ஹாக்கி பேட் மற்றும் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கப்பட்டனர்.

இந்தத் தாக்குதல் காரணமாக, பலத்த காயமடைந்த ரோஹித், ரத்த வௌ;ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.