Show all

ஆசிரியர் சத்யேந்திர யாதவ், வெயிலில் முட்டி போட வைத்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜார்கண்ட் மாநிலம் பசூர் மாவட்டம் லத்கரை சேர்ந்தவர் ரூப்வந்தி குமாரி. அருகிலுள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்துவருகிறார்.

சம்பவத்தன்று ஆசிரியர் அளித்த வீட்டுப்பாடத்தை ரூப்வந்தி எழுதாமல் பள்ளிக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஆசிரியர் சத்யேந்திர யாதவ், மாணவியை வெயிலில் முட்டி போட வைத்துள்ளார்.

மேலும் ரூப்வந்தியின் முதுகில் செங்கல்லையும் அவர் கட்டியுள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அச்சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து அவரை அங்குள்ள சதார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ரூப்வந்தி தொடர்ந்து உடல்நலக் குறைவுடனேயே காணப்பட்டுள்ளார்.

குடும்பம் ஏழ்மையில் வாடியதால் அவரால் உரிய சிகிச்சைப் பெற முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால், உடல்நிலை மோசமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ள மாவட்ட கல்வி அதிகாரி, விசாரணையின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

                                                


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.