Show all

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் பணம் கொடுத்தால்...

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் பணம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு நல்லவர்களைத் தேர்வு செய்யுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி, ஒசூரில் தேமுதிக நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர், அக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் தேர்தல் இப்போது வந்தாலும்கூட 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களைத் தேமுதிக நிறுத்த முடியும் என்று அவர் கூறினார்.

தமிழகத்தில் மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகள் அதிகமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

துணை முதல்வராக இருந்தபோதும், மேயராக இருந்தபோதும் மக்களைச் சந்திக்காத திமுக பொருளாளர் ஸ்டாலின், தற்போது மக்களைச் சந்திக்க பயணம் மேற்கொள்வது அவருடைய ஏமாற்று வேலை என்று அவர் குறிப்பிட்டார்

பின்னர் பேசிய தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் பணம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு நல்லவர்களைத் தேர்வு செய்யுமாறு குறிப்பிட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.