Show all

சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழக மீனவர்கள்

சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாமல் இருக்கும் மீனவர்கள் மற்றும் படகுகள் விடுவிக்கப்பட வேண்டும்.

மூழ்கிய படகுகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.

பாரம்பரிய மீன்பிடி உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்பவை உட்பட பல அம்சங்களை வலியுறுத்தி தமிழக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடுவண் அரசு தமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனத் தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.