தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள, ஆம் ஆத்மி
கட்சித் தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியை விட நான்
மிகப்பெரிய தேச பக்தன். பேச்சுரிமையை நசுக்கும் முயற்சியை, பா.ஜ., நிறுத்த வேண்டும்
என்றார். தெலுங்கானா மாநிலத்தில், கெஜ்ரிவால், காங்., துணை
தலைவர் ராகுல், சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் மீது தேச விரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை கண்டித்து, சமூக வலைதளமான, சுட்டுரையில் கெஜ்ரிவால்
வெளியிட்டுள்ள செய்தியில் கூறி உள்ளதாவது: தலித் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, ஏழை
மக்களுக்கும் ஆதரவாக குரல் எழுப்பியதால் நான், பா.ஜ.,வுக்கு தேச விரோதி ஆகிவிட்டேன்;
என் குரலை நசுக்க முடியாது. தலித், ஏழை எளிய மக்களுக்கான போராட்டம் தொடரும். நான், மோடியை விட மிகப்பெரிய தேச பக்தன். உண்மையில்
தேச விரோத கோஷமிட்டவர்களை மோடி ஏன் கைது செய்யவில்லை? காரணம், அவர்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். அவர்களை
கைது செய்தால், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா எதிர்ப்பு தெரிவிப்பார். ஜம்மு
- காஷ்மீரில் மெகபூபா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சி பாதிக்கப்படும்.
அதனால் தான் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு சுட்டுரையில் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.