Show all

சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்

ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்

ஜி.எஸ்.டி மசோதா குறித்த விவாதத்துக்கு வருமாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

இதன்படி, பிரதமரின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் உடனிருந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு பதவியேற்ற பின் சோனியா காந்தி - மோடி ஆகியோர; தற்போதுதான் நேருக்கு நேர் சந்திக்கின்றனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.