Show all

தனியார் தொலைகாட்சி தொகுப்பாளரான நிரோஷா தூக்கு போட்டு தற்கொலை

ஆந்திர மாநிலம் செகந்திரபாத்தில் உள்ள விடுதியில் தனியார் தொலைகாட்சி தொகுப்பாளரான நிரோஷா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மண்டல் பகுதியை சேர்ந்தவர் நிரோஷா (வயது 23) இவர் செகந்திராபாத்தில் உள்ள தனியார் தொலைகாட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளாராக பணியாற்றி வருகிறார்.

 

இந்நிலையில் அவர் தங்கியிருந்த விடுதியில் இன்று அதிகாலை தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விடுதி உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நிரோஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

நிரோஷா தற்கொலை செய்வதற்கு முன்பாக செல்போனில் பேசி உள்ளதாகவும் அதன் பின்னரே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

நிரோஷா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது ஆந்திரமாநிலத்தில் உள்ள சின்னதிரையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

தற்கொலை செய்துகொண்ட நிரோஷாவிற்கு காதலன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.

 

நிரோஷா காதலில் தோல்வி காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது  மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.