Show all

வாக்கு அளிக்கலேன்னா வங்கி கணக்கில் ரூ.350 லபக்! ஒரு கிழமைக்கு முன்னமேயே கொண்டாடப் படுகிறதா முட்டாள்கள் நாள்

முட்டாள்கள் நாளுக்கு இன்னும் ஒரு கிழமை இருக்கிற நிலையில், ஒரு ஹிந்தி செய்தி இதழ்: ஹோலி விழாக் கொண்டாட்டப் பகுதியில் பொய்ச் செய்திகளாக, 'மக்களவை தேர்தலில் வாக்களிக்காதவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.350 பிடித்தம் செய்யப்படும்' போன்ற சில செய்திகளை வெளியிட்டிருக்க ஹிந்தி பேசும் எளிய மக்களிடம் பரபரப்பை உண்டாக்கியது.

10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'மக்களவை தேர்தலில் வாக்களிக்காதவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.350 பிடித்தம் செய்யப்படும்' என்று தெரிவிக்கிற வகையில் பிரபல ஹிந்தி நாளிதழில் வெளியான செய்தியால் மக்கள் பரபரப்பு ஏற்பட்டு, அது தொடர்பான காணொளி தீயாகி வருகிறது.  

மக்களவை தேர்தல் 28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120 முதல் 05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121 வரை (11.04.2019-19.05.2019) 7 கட்டங்களாக நடைபெற்று, 09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121 (23.05.2019) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியாக உள்ளது.

முகமதியர் படையெடுப்பால், அடிமைப் பட்ட மக்களால் ஏற்றுக்கொள்ளப் பட்ட உருது மொழி சமசுகிருத எழுத்து வடிவம் பெற்று, ஹிந்தி மொழியாக, இந்தியாவின் வடபகுதியில் பெரும்பான்மை பாமர மக்களால் பேசப்பட்டு வருகிறது. 

ஹிந்தி மொழியில் வெளியாகும் செய்திகள், அவ்வப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது உண்டு. அந்தவகையில் ஒரு ஹிந்தி செய்தித்தாளில், 'மக்களவை தேர்தலில் வாக்களிக்காதவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.350 பிடித்தம் செய்யப்படும்' என்ற செய்தி வெளியாகி இருந்தது.

மேலும், வாக்கு அளிக்காதவர்கள் அவர்களின் ஆதார் அட்டை எண் மூலம் அடையாளம் காணப்படுவர் என்றும், அதில் இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும் என்றும், இதற்காக வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவிப்பு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில், 'ஓட்டுப்போடாத ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் இருந்தும் ரூ.350 கழிக்கப்படும். தங்களின் வங்கிக்கணக்கில் ரூ.350 வைத்திருக்காதவர்கள், தங்கள் செல்பேசிக்குப் பணம் செலுத்தும்போது, இந்த அபராத தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும். உச்சஅறங்கூற்றுமன்றத்திடம் இருந்து தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அனுமதி பெற்றுவிட்டதால், இதற்கு எதிராக புகார் அளிக்க முடியாது' என்று இந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

செய்தியின் கடைசியில், 'இந்த அறிவிப்பில் உண்மையில்லை' என்ற அறிவிப்பு இருந்தது. தற்போது கொண்டாடப்பட்டு வரும் ஹோலி விழாவின் நகைச்சுவை பிரிவில் செய்தி வெளியாகியிருப்பதால், இந்தச் செய்தியில் உண்மை ஏதுமில்லை என்பது பின்னர்தான் தெரியவந்தது. அதேபோல், பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதி ஹபிஸ் சயீதை, பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைத்து விட்டது என்றும், 

நிதி மோசடி செய்த விஜய் மல்லையாவும், நீரவ் மோடியும், தங்களின் பாவங்களை போக்குவதற்காக, கும்பமேளாவில் நீராடியுள்ளனர் என்று மற்ற சில போலி செய்திகளும் வெளியாகியுள்ளன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,101.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.