Show all

கஜா புயல் பாதிப்பிற்கு ரூ.1 கோடி நிவாரண பொருட்கள்! உச்ச அறங்கூற்றுமன்ற வழங்கறிஞர்கள் சங்கம் வழங்கியது

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, டெல்லியில் உச்ச அறங்கூற்றுமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. நிவாரண பொருட்கள் சேகரிப்பு பணியை உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் பானுமதி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். 

அதனைத் தொடர்ந்து துணிமணிகள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்கள் என மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேர்ந்தன. இந்தப் பொருட்கள் அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டு நேற்று மாலை டெல்லி தமிழ்நாடு அரசு இல்ல முதன்மை உறைவிட ஆணையர் முருகானந்தம் தலைமையிலான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் அந்தப் பொருட்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடந்தன. சென்னையில் உயர் அறங்கூற்றுமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் அவற்றை பெற்று, புயல் பாதித்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்புவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,989.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.