Show all

நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் பழ.கருப்பையாவிடம் பேசி வீடு தாக்கப்பட்டதற்கு ஆறுதல் கூறினார

சென்னை துறைமுகம் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்றஉறுப்பனர் பழ.கருப்பையா. இவர் குடும்பத்துடன் ராயப்பேட்டை, லாயிட்ஸ் காலனியில் வசித்து வருகிறார். இவர் கட்சியின் கட்டுப்பாடு மற்றும் குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாக, கட்சியிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நீக்கப்பட்டார். இதனால் சட்டமன்றஉறுப்பனர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.

 

தொடர்ந்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில் அவருடைய வீடு மற்றும் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தினர்.

 

இதையடுத்து அவருக்கு பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் மற்றும் வைகோ உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வந்தனர். நடிகர் ரஜினிகாந்த் நேற்று பழ.கருப்பையாவுக்குப் போசியின் மூலம் தொடர்பு கொண்டு, ஆறுதல் கூறினார்.

 

இதுகுறித்து பழ.கருப்பையா கூறும்போது, ‘என்ன பிரச்சினை, என்ன நடந்தது என்பது குறித்து என்னிடம் நடிகர் ரஜினிகாந்த் கேட்டறிந்தார். நானும் விவரத்தை சொன்னேன். எனக்கு ஆறுதல் தெரிவித்தார். மலேசியா நாட்டுக்கு செல்லவிருக்கிறேன். வந்த பிறகு வந்து சந்திக்கிறேன் என்றார். என்னுடைய வீட்டில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது முறையாக விசாரணை நடத்தி நீதிமன்றத்துக்கு அனுப்பாமல், பெயரளவுக்கு கைது செய்யப்பட்டு, காவல்நிலையத்திலேயே சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.