Show all

கார் விபத்தில் நடிகை பிரணிதா அதிர்ஷ்டவசமாக காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார்

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில், பிரபல நடிகை பிரணிதா சுபாஷ் காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார். அவருடன் பயணம் செய்த 2 பேர் லேசான காயமடைந்தனர்.

 ஹைதராபாதில் நடைபெற்ற கடைத் திறப்பு விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக கம்மம் நகரில் இருந்து பிரணிதா சுபாஷ் தனது உதவியாளருடன் காரில் சென்று கொண்டிருந்தார். நல்கொண்டா மாவட்டம் மோதே காவல்நிலையம் அருகே கார் வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக அதை ஓட்டுநர் திருப்பினார். அப்போது அந்தக் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி, தலைகுப்புறக் கவிழ்ந்தது.

 இந்த விபத்தில் நடிகை பிரணிதா அதிர்ஷ்டவசமாக காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார். கார் ஓட்டுநர், உதவியாளர் ஆகியோர் லேசான காயமடைந்தனர். தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் பிரணிதா கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் சகுனி, மௌன குரு மற்றும் மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் அவர் கதாநாயகியாக நடித்திருந்தார்.

 விபத்து குறித்து சுட்டுரை சமூகவலைதளப் பக்கத்தில் பிரணிதா வெளியிட்ட பதிவுகளில், காரில் வந்த அனைவரும் பத்திரமாக உள்ளோம். உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தை தொலைபேசியில் அழைத்தோருக்கு எனது நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.