Show all

பிரதமர் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மர்ம தொலை பேசி

டெல்லியில் பிரதமர் மற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த மர்ம தொலை பேசி அழைப்பை அடுத்து காவல்துறையினர் அங்கு தீவிர சோதனை மேற்கொண்டனர்.

 

டெல்லியில் தேசிய புலனாய்வுத் துறை கட்டுப்பட்டு அறைக்கு மர்ம தொலை பேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம மனிதன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரது இல்லத்தில் வெடிகுண்டு புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து உடனடியாக அழைப்பை துண்டித்தான்.

 

புலனாய்வு துறையின் தகவலின் பேரில் அங்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள் இருவரது இல்லத்திலும் சோதனை மேற்கொண்டனர். இறுதியில் பொய்யான தகவல் என்பது தெரியவந்தது. எனினும் இது குறித்து டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம தொலை பேசி அழைப்பு குறித்து புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.