‘வேலையே இல்லாமல் சோற்றுக்கே திண்டாட்டமாய் இருக்கிற மாநிலங்களின் தாய்மொழியான ஹிந்தியை மற்ற மாநிலங்களில் திணிப்பதை விட்டு விட்டு அவர்களுக்கு அடுத்த மொழிகள் மீது மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தி, அடுத்த மொழிகளையும் கற்கும் ஆர்வத்தையும் தூண்ட முனையலாம் பாஜக போன்ற வடமாநிலக் கட்சிகள்’ என்பதை அறிவுரையாக மேற்கொள்ள வேண்டிய தேவையை உணர்த்தும் இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் அறிக்கை. 22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் அறிக்கையின் படி, அதிக வேலையின்மை விகிதத்தில் 31.2 விழுக்காட்டுடன் திரிபுரா முதலிடத்தில் உள்ளது. மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கினர் வேலையில்லாமல் இருக்கின்றனர். இதற்கு அடுத்த இடத்தில் டெல்லி 20.4 விழுக்காட்டுடனும், ஹரியானா 20.3 விழுக்காட்டுடனும், ஹிமாச்சல பிரதேசம் 15.6 விழுக்காட்டுடனும், பஞ்சாப் 11.1 விழுக்காட்டுடனும், ஜார்கண்ட் 10.9 விழுக்காட்டுடனும், பீகார் 10.3 விழுக்காட்டுடனும், சட்டிஸ்கர் 8.6 விழுக்காட்டுடனும், உத்திரபிரதேசம் 8.2 விழுக்காட்டுடனும், ராஜஸ்தான் 7.4 விழுக்காட்டுடனும், சிக்கிம் 6.4 விழுக்காட்டுடனும், குஜராத் 6.2 விழுக்காட்டுடனும், மேற்கு வங்கம் 6 விழுக்காட்டுடனும், கேரளாவில் 5.4 விழுக்காட்டுடனும், கர்நாடாகவில் 3.3 விழுக்காட்டுடனும் வேலை தேடி அலைந்து வருகின்றன. இந்தியாவின் ஒரே மாநிலமாக தமிழகம் மட்டுமே 1.8 விழுக்காட்டுடன் மிகக் குறைந்த வேலையின்மையை கொண்டுள்ளதாக இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அழகியலில்தாம், சோற்றுக்கே திண்டாட்டமாய் இருக்கிற மாநிலங்களின் தாய்மொழியான ஹிந்தியை மற்ற மாநிலங்களில் திணிப்பதை காங்கிரசும், தொடர்ந்து பாஜகவும் முன்னெடுத்து வருகின்றன. தற்போதெல்லம் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தமிழகத்திற்கு கூட்டம் கூட்டமாக கட்டுமானப் பணிகளுக்கும், மற்ற பல குறைந்த பட்ச கூலிவேலைகளுக்கும் படையெடுத்துக் கொண்டிருக்கிற நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவர்களுக்கு உதவும் முகமாகவே ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை பாஜக அமல் படுத்த நினைக்கிறது போல. காங்கிரசும் சரி, பாஜகவும் சரி வட மாநில மக்களை கல்வியிலும் தொழிலிலும் முன்னேற்ற முயலாமல், மற்ற மாநிலங்களில் இருந்து பிடுங்கிக் கொடுக்கும் வேலைகளிலேயே காலத்தை வீணடித்து வருகின்றன. வடஇந்தியாவில் எவனாவது ஒருவன் அறிவு பெற்ற தலைவனாக எழுந்து, தற்சார்பை மீட்க முயன்றால் மட்டுமே இதற்கு தீர்வு. மற்ற மாநிலங்களில் இருந்து பிடுங்கிக் கொடுக்கும் வேலைகளை விட்டு விட்டு அவர்களுக்கு அடுத்த மொழிகள் மீது மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தி, அடுத்த மொழிகளையும் கற்கும் ஆர்வத்தையும் தூண்ட முனையலாம் பாஜக போன்ற வடமாநிலக் கட்சிகள். இவ்வறிக்கையில் பாஜக ஆளும் பகுதியான திரிபுரா, ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், பீகார் மற்றும் உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக வேலையின்மையே நிலவுவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில்தாம் ஊர்திகள் துறை, வேகமாக நகரும் நுகர்வுப்பொருட்கள் துறையில் மோசமான தேவை காரணமாக விற்பனை குறைந்து வருகிறது. இதனால் பணி நீக்கம் தொடர்ந்து வருகிறது. நாட்டில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் மந்த நிலை, இந்த வேலை சூழ்நிலையை பிரதிபலிக்கிறது என்றும் கூறலாம். இதை மேம்படுத்த அரசு கார்ப்பரேட் வரியை குறைத்தல் மற்றும் ஏற்றுமதி, ரியல் எஸ்டேட் தொழில்களுக்கான தொகுப்புகளை அறிவித்தல் உள்ளிட்ட மந்தமான பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான நடவடிக்கைகளை கொண்டு வந்த போதிலும், இதற்கான முடிவுகள் தான் இன்னும் காணப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,300.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.