Show all

பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் இயங்குவதாக பிருந்தா காரத் குற்றச் சாட்டு.

ஆர்.எஸ்.எஸ் இயக்கம், பிரதமர் மோடியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மதப்பிளவு வேலைகளைச் செய்து வருவதாக, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் குற்றம் சாட்டியுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட மக்களின் வாழ்வாதார மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட பிருந்தா காரத்,

பிரதமர் மோடி அரசு பொதுத்துறை நிர்வாக மேம்பாடு, அரசு பள்ளிக்கூடங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்டவைகளுக்கு ஒரு பைசா கூட செலவு செய்ய முன்வருவதில்லை. இதை தவிர்த்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அவர்களை இங்கு முதலீடு செய்ய அழைத்து வர முயற்சி செய்கிறார்.

மோடி தலைமையிலான ஆட்சியில் வெங்காயம், பருப்பு போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ளது. இதுவரையில் 10 முதல் 12 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இவரது ஆட்சியால் இந்தியா வளர்ச்சி பாதைக்கு செல்லவில்லை.

மோடி சொல்லும் மேக் இன் இந்தியா தோல்வியடைந்த திட்டம்.

அது பிரேக் இன் இந்தியா ஆகும்.

மதப் பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சியில் மோடி அரசு ஈடுபடுகிறது. ஆர்.எஸ்.எஸ். என்கிற அமைப்பு மோடியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு மதப்பிளவு வேலைகளைச் செய்து வருகிறது. என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.