Show all

வஞ்சைனையில்லாமல் எல்லா தியாகங்களிலும் தமிழர் பங்கு பெறுவர்! ஏ.என்.32 விமான விபத்தில் பலியானவர்களில் ஒருவர் தமிழர்.

வஞ்சைனையில்லாமல் எல்லா தியாகங்களிலும் தமிழர் பங்கு பெறுகின்றனர்! அதிகார மையங்களில்தாம் தமிழர் இடம் பெறமுடியாமல் வஞ்சிக்கும் நடுவண் அரசு. நேற்று கூட தொடர் வண்டித் துறையில் ஹிந்தித் திணிப்பில் தமிழர்களை போராடத் தூண்டிய ஹிந்தி ஆதிக்க அதிகார மையம்.

32,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் 32 ரக விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரில் தமிழகத்தை சேர்ந்த வினோத் ஹரிஹரன் என்பவரும் ஒருவர் என தெரியவந்துள்ளது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் கிளம்பிய அரைமணி நேரத்தில் அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லையோரம் மாயமானது. 

பத்து நாட்களுக்குப் பிறகு கடந்த திங்களன்று அருணாச்சல பிரதேசத்தின், சியாங் மாவட்டத்தில் உள்ள கட்டி என்ற கிராமம் அருகே விமானத்தின் பாகங்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து விமானத்தின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு மீட்புக்குழுவினர் 2 நாட்களுக்குப்பின் சென்றனர். 

அப்போது விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் ஆய்வு செய்ததில் 13 பேரில் ஒருவர் கூட பிழைக்கவில்லை என விமானப்படை உறுதி செய்தது. மேலும் விமானத்தின் கருப்புப்பெட்டியும் கண்டெடுக்கப்பட்டது.  இன்று விமானியின் அறையில் இருந்த ஒலிப்பதிவு கருவியை மீட்புக்குழுவினர் கண்டெடுத்தனர். 

இந்நிலையில், இந்த விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரில் தமிழகத்தை சேர்ந்த வினோத் ஹரிஹரன் என்பவரும் ஒருவர் என தற்போது தெரியவந்துள்ளது. கோவையை சேர்ந்த வினோத் ஹரிஹரன் கடந்த எட்டு ஆண்டுகளாக விமானப்படையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,184.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.