Show all

100 ரூபாய் தொலைந்து போனதால் 18 வயது வாலிபர் ஒருவர் தற்கொலை

டெல்லியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் 100 ரூபாய் தொலைந்து போன சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

டெல்லி கல்யாண் புரிசையை சேர்ந்தவர் சிவம். இவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். கிடைக்கிற வேலையை செய்து தனது அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தார்.

இந்நிலையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் வேலை செய்ததால் அவருக்கு 300 ரூபாய் சம்பளம் கிடைத்துள்ளது. அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார் சிவம். ஆனால் அந்தப் பணத்தில் 100 ரூபாயை எங்கேயோ தவறி தொலைத்துவிட்டார்.

இதனால் மனமுடைந்த சிவம் அதையே நினைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அவர் இரவு வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவருக்குக் கிடைத்த 300 ரூபாயில் 100 ரூபாயை அவர் தொலைத்துவிட்டதாகவும், அந்த 100 ரூபாயைப் தேடியும் கிடைக்காத வருத்தத்தில் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிய வந்தது.

100 ரூபாய் தொலைந்து போனதால் 18 வயது வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.