கடலுக்குள் மீன் பிடிக்கச்சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை இலங்கை கடல்படையினர் இன்று சிறைப்பிடித்ததால் மீனவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 129 விசைப்படகுகளில் 500 க்கும் மேல்பட்ட மீனவர்கள் திங்கள்கிழமை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது கோட்டைப்பட்டினத்தை சுற்றி வளைத்த இலங்கை கடல் படையினர் அதில் இருந்த மீனவர்கள் மரியசாமுவேல்(45), முத்தானந்தம்(50), பெருமாள்(55)ஆகிய 3 பேரையும் படகுகளுடன் கைது செய்து அனைவரையும் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். சில மாதங்களுக்குப்பின் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களை இலங்கை கடல்படை மீண்டும் கைது செய்துள்ளதால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதன் காரணமாக புதுகை மாவட்ட கடலோர மீனவ கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.