Show all

தனி ஒருவனின் பலம் வாய்ந்த தூணாக இருந்த நயன்தாரவுக்கு சிறப்பு நன்றி: மோகன்ராஜா.

ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான படம் - தனி ஒருவன். தமிழில் சூப்பர் ஹிட் ஆன இந்தப் படம், வெளியான முதல் 10 நாள்களில் ரூ. 50 கோடி வசூலித்தது. இப்போது 50-வது நாளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் மோகன் ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

தனி ஒருவன், 93 திரையரங்குகளில் 50வது நாளாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம், எனது குழு, ஊடகம், ரசிகர்களுக்கு நன்றி. ஒரு படத்துக்கு உள்ளடக்கம் தான் ராஜா என்பதை இந்தப் படம் மூலமாக ரசிகர்கள் மீண்டும் நிரூபித்துள்ளார்கள். சித்தார்த் அபிமன்யூ என்கிற கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்தவருக்கு நன்றி. தன் நடிப்பின் மூலமாக ஒரே இரவில் உலகை தன் பக்கம் திருப்பியுள்ளார். என்னுடைய இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கும் நன்றி. படத்தின் சக்தியாக விளங்கிய ஹிப் ஹாப் தமிழாவுக்கு நன்றி. தனி ஒருவனின் பலம் வாய்ந்த தூணாக இருந்த நயன்தாரவுக்கு சிறப்பு நன்றி என்று படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து மோகன் ராஜா ட்வீட்களை வெளியிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.