Show all

100க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்து, சிலுவம்மா பலி

கேரள மாநிலத்தில், 2013 முதல், நேற்று முன்தினம் வரை, 41 பேர், தெரு நாய்கள் கடிக்கு பலியான தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே, 100க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்து, சிலுவம்மா, 65, பலியான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே பகுதியை சேர்ந்த டைசியும், தெரு நாய்கள் கடித்து, சிகிச்சை பெற்று வருகிறார். மாநிலத்தில், தெரு நாய்கள் கடித்து, பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநில, துணை மருத்துவ அலுவலர் நாசர் கூறியதாவது: கடந்த, 2013 முதல், நேற்று முன்தினம் வரை, மாநிலம் முழுவதும், 41 பேர், தெரு நாய்கள் கடித்து இறந்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர், தெரு நாய்கள் கடிக்கு ஆளாகி, காயமடைந்துள்ளனர். இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது, நாய்கள் துரத்தி, விழுந்து காயமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.இவ்வாறு நாசர் கூறினார். இதுபோன்ற சம்பவங்கள், இனியும் தொடராமல் இருக்க, மாநில அரசு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.