Show all

65 லட்சம் கார்களைத் திரும்பப் பெறுவதாக டொயோட்டோ நிறுவனம்.

பல்வேறு நாடுகளில் உள்ள சுமார் 65 லட்சம் கார்களைத் திரும்பப் பெறுவதாக டொயோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ள சுமார் 65 லட்சம் கார்களில் உள்ள பவர் விண்டோ சுவிட்ச்கள் தேவைக்கும் அதிகமான சூடாகி அதன் காரணமாக உருகவும் தீ பற்றும் வாய்ப்பும் உள்ளதால், அவற்றைத் திரும்ப பெற்று, குறைப்பாட்டை சரி செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டோ கார்களின் பவர் விண்டோ சுவிட்ச்கள் தொடர்பாக இதுவரையில் 11 புகார்கள் வந்துள்ளதாகவும், அமெரிக்காவில் இருந்து மட்டும் 7 புகார்கள் வந்துள்ளதாக டொயோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.