Show all

டெல்லி துவர்கா நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

டெல்லி துவர்கா நீதிமன்றத்தில் நேற்று நடந்த வழக்கு ஒன்றின் குற்றவாளியான அங்கித் தாகர் என்பவர், விசாரணைக்கு ஆஜராவதற்காக நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அங்கே அவர் தன் மீது புகார் கொடுத்தவர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

சிறிது நேரத்துக்குப்பின் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர், அங்கே ஜூஸ் கடையில் நின்றிருந்த அங்கித் தாகர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் குண்டுபாய்ந்து காயமடைந்தார். மேலும் கடை ஊழியர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

 

இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே காவல்துறையினர் அங்கு வந்து காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தினர்.

 

அப்போது, மற்றொரு வழக்கில் சாட்சி அளிப்பதற்காக வந்திருந்த ஒருவரை கொலை செய்வதற்காக அந்த மர்ம நபர்கள் அங்கு வந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டுள்ள காவல்துறையினர், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.