06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் இரண்டு தினங்களுக்கு முன்னர் ஜெய்சு-இ-முகம்மது இயக்க பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் தமிழக வீரர்கள் இருவர் உட்பட 41 நடுவண் ஆயுதக் காவல்படை வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து, காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் ராணுவம் உள்ளிட்ட படைகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. இன்று அதிகாலை புல்வாமாவில் இருக்கும் பிங்லான் என்ற பகுதியில் தீவிரவாதிகள் சிலர் சுற்றிவளைக்கப்பட்டனர். அவர்களுக்கும் வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை வெடித்தது. சில மணி நேரம் நடந்த இந்த சண்டையில் ராணுவ முதுவர் உள்ளிட்ட 4 வீரர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து அங்கு சண்டை நடந்துவருகிறது. மோடி அரசே, உடனடியாக கூடுதல் படையை அனுப்புக என்ற மக்கள் முழக்கம், இணையத்தை நிறைத்து வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,067.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.