Show all

வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்ட நம்ம தலைமைஅமைச்சர் மோடி! கிழித்துத் தொங்க விட்ட சந்திரபாபு நாயுடு

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடும்ப உறவுகளை பற்றி தெரியாதவர். மனைவியை பிரிந்தவர் என்று மோடி மீது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ் சாட்டியுள்ளார். ஆந்திராவில் சுற்றுப்பயணம் செய்த மோடி, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பற்றியும், அவரது அரசை பற்றியும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசினார். லோகேஷ் என்பவரின் தந்தைதான் சந்திர பாபு நாயுடு என்றும், குடும்ப உறவுகளுக்காக அரசியல் செய்கிறார் என்றும் கூறியிருந்தார். 

மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு சந்திரபாபு நாயுடு பதிலடி கொடுத்து உள்ளார். விஜயவாடாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது: எனது மனைவி, மகன் என குடும்பத்தாரால் நான் பெருமை அடைகிறேன். ஏனெனில் எனக்கு குடும்பம் இருக்கிறது. உறவுகளின் அருமை தெரியும். மோடியோ திருமணம் முடிந்து மனைவியை பிரிந்து இருப்பவர். மனைவியை புறந்தள்ளியவர். விவாகரத்து கொடுக்காமலேயே மனைவியை பிரிந்தவர். தமது அரசியல் குருவான அத்வானியை ஒதுக்கிய மோடி தம்மை பற்றி எதுவும் கூற தேவையில்லை என்று கூறி உள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,060.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.