Show all

விஷால், எஸ்.வி.சேகர் ஆகிய இருவர் மீதும் மானநஷ்ட வழக்கு தொடர்வேன்.

2015-18-ம் ஆண்டுக்கான நடிகர் சங்க நிர்வாகத்தினைத் தேர்வு செய்யும் தேர்தல் வரும் அக்டோபர் 18-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. நடிகர் சரத்குமார் தலைமையிலான அணியும், நடிகர் நாசர் தலைமையிலான அணியும் இத்தேர்தலில் களம்காண உள்ளனர;

நடிகர் சங்கத்தின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சரத்குமார் பேட்டியில்,

நடிகர் சங்கத்துக்கு ரூ.24 லட்சம் வருமானத்தில் ஊழல் நடந்து விட்டதாக ஆதாரமில்லாமல் தவறான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறார்கள். தவறான குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்துள்ள விஷால், எஸ்.வி.சேகர் ஆகிய  இருவருக்கும் விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் 10 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என்று கூறினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.