Show all

டெல்லியின் ஆளும் ஆம் ஆத்மியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மகேந்திர யாதவ் கைது

டெல்லியின் ஆளும் ஆம் ஆத்மியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மகேந்திர யாதவ். இவர் மீது கலவரத்தில் ஈடுபட்டதாகவும், பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்தியதாகவும், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் குற்றச் சாட்டுகள் உள்ளன. இதையடுத்து காவல்துறையினர் நேற்று மகேந்திர யாதவை கைது செய்தனர்.

 

இது குறித்து ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில்,  டெல்லியில் 3 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகேந்திர யாதவ் போராட்டம் நடத்தினார். அப்போது காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு உள்ளார் எனக் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.