Show all

இறுதிச் சடங்கு நடக்கும் மைதானத்துக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்ட போது, குழந்தையிடம் அசைவு

சீனாவில் கடந்த ஜனவரி மாதம் மருத்துவமனை ஒன்றில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டு 23 நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.

 

வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தையின் உடல்நிலை மோசமாகி மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் போது, குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

 

இதனால், குழந்தையை மருத்துவமனையின் பிணவறையில் வைத்திருந்தனர். சுமார் 15 மணி நேரம், 12 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் குழந்தை இருந்தது.

 

பிறகு, இறுதிச் சடங்கு நடக்கும் மைதானத்துக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்ட போது, அங்கு, குழந்தை அசைவதையும், முணகுவதையும் பார்த்த பெற்றோர், உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.

 

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது.

 

குழந்தையை பிணவறையில் வைக்கும் முன், அதன் தந்தை, குழந்தையை இரண்டு அடுக்கு துணியால் சுற்றி ஒரு பைக்குள் பத்திரமாக வைத்ததுதான், அந்த குழந்தையை குளிர் நிலையில் இருந்து மீட்டதாகக் கூறப்படுகிறது.

 

 

 

 

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.