வருகிற சட்டமன்ற தேர்தலில் பணம் வாங்காமல் வாக்களியுங்கள்
என்று பொதுமக்களுக்கு ஆட்சியர் சகாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆட்சியர் சகாயம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து
பேசினார். அப்போது தேர்தல் பற்றி அவரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதுபற்றி பேசிய அவர்,
இந்திய தேர்தல் ஆணையம் எப்படி சுட்டிக்காட்டுகிறதோ,
அறிவுறுத்துகிறதோ, அதைப்போல நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு நாம் எல்லோரும் நம்முடைய
பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. நம்முடைய மக்கள், தங்களுடைய வாக்கு விற்பனைக்கு
அல்ல என்று அறிவிக்க வேண்டும். பணமோ, பரிசுப் பொருள்களோ பெற்றுக்கொண்டு வாக்களிப்பது
ஆரோக்கியமான சூழல் அல்ல. அது ஜனநாயகத்திற்கு எதிரானது. எனவே மக்கள் நேர்மையாக சிந்தித்து, தகுதியான, தங்களுடைய
தேசத்திற்கு தன்னலம் கருதாது யார் பங்களிப்பு செய்வார்களோ அவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
நான் ஏற்கனவே கூறியதுபோல, எவருக்கு வேண்டுமானானும்
வாக்களிக்கலாம், கவருக்கு வாக்களிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கேட்டுக்கொண்டர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.