Show all

பட்டேல் சமூகத்தினர் தற்கொலை செய்யக் கூடாது. முடிந்தால் காவலர்களைக் கொல்லுங்கள்.

குஜராத்தின் மேட்டுக்குடி வர்க்கமான பட்டேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடி வருபவர் ஹர்திக் பட்டேல். போராட்டங்களில் வன்முறை, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியது என பல்வேறு வழக்குகள் ஹர்திக் பட்டேல் மீது தொடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே சில நாட்களுக்கு முன்பு தமது ஆதரவாளர்கள் முன்பு பேசிய ஹர்திக்,

பட்டேல் சமூகத்தினர் தற்கொலை செய்யக் கூடாது. முடிந்தால் காவலர்களைக் கொல்லுங்கள். என்று அவர் தெரிவித்திருந்தார். ஹர்திக்கின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக அவர் மீது குஜராத் போலீசார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் எதிரொலியாக அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.