Show all

சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்கவேண்டும்: சீக்கிய வழக்கறிஞர் ஹர்வீந்தர் சவுத்ரி.

சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்கவேண்டும் என சீக்கிய வழக்கறிஞர் ஹர்வீந்தர் சவுத்ரி உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார், அவரின் மனுவை உச்ச நீதிமன்றம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது. அவரது மனுவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மூலம் இணையதளத்தில் உலவும் சர்தார்ஜி ஜோக்குகளுக்கும் அந்த இணையதளங்களுக்கும் தடை விதித்து அதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஹர்வீந்தர் சவுத்ரியின் இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஒரு மாதத்திற்கு பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.