Show all

ஜெய்பானர்ஜியின் பேச்சு பாஜவுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நடிகராக இருந்து பாஜவுக்கு வந்த மேற்கு வங்கத்தில் உள்ள பாஜ தலைவர் ஜெய் பானர்ஜி. மயூரேஸ்வர் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற கட்சி கூட்டத்தில் ஜெய் பானர்ஜி பேசுகையில்,

கடந்த லோக்சபா தேர்தலில் மிகவும் முறைகேடான முறையில் திரிணாமுல், பாஜவை தோற்கடித்துள்ளது. கடந்த முறை எங்களை ஏமாற்றியிருக்கலாம். ஆனால் வரவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் அது நடக்காது. தேர்தல் ஆணையம் தற்போது எங்களது வசம் உள்ளது. நாங்கள் ராணுவத்தை கொண்டு வந்து இறக்கி அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை நடத்திக் காட்டுவோம்.

பீகாரில் எங்கள் தலைவர்கள் வெற்றி பெறுவார்கள். அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தையும் வெற்றியால் அடித்து நொறுக்குவோம். அப்போது எங்களது தலைவர்கள் வெற்றி பெறுவது உறுதி என்று பேசினார். தற்போது ஜெய் பானர்ஜியின் பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தற்போது பீகார் தேர்தல் நடைபெற்று வரும் வேளையில் தேர்தல் ஆணையம் பாஜவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற ஜெய்பானர்ஜியின் பேச்சு பாஜவுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.