அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு உரிய நிதியை நடுவண் அரசு தர வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், நடுவண் அரசு ஒப்புக் கொண்ட படி சர்வசிக்ஷா அபியான் திட்டத்திற்கு 65சதவீதம் நிதியை தர வேண்டும் என கோரியுள்ளார். 2015 - 2016-ம் ஆண்டுக்கான சர்வசிக்ஷா அபியான் திட்ட மதிப்பீடு ரூ.2329.15 கோடி என்று ஜெயலலிதா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேற்கண்ட நிதியில் 65 சதவீதத்தை தமிழகத்திற்கு மத்திய அரசு அளிக்க வலியுறுத்தியுள்ளார். 2015 மே 15ம் தேதி ரூ.389.31 கோடியை இடைக்காலத் தொகையாக நடுவண் அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.