இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா
தீவிரவாத இயக்கம் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தீவிரவாதிகள் சிலருக்கும்
காஷ்மீர் பிரிவு தலைவர் அபு துஜானாவிற்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலைக் கேட்ட
உளவுத்துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த உரையாடலில் துஜானாவுடன் 10 தீவிரவாதிகள் இணைந்து
காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்த
திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ராணுவம் மற்றும் எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தும்
வேளையில் ராணுவ வீரர்களின் ஆயுதங்களைக் கைப்பற்றும் தீவிரவாதிகளுக்கு தலா ரூ.1 லட்சம்
சன்மானம் வழங்கப்படும் என்று லஷ்கர- இ-தொய்பா கூறியுள்ளதை உளவுத்துறை கூறியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சமீபத்தில்
பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த சண்டையில் அபுதுஜானாவும், 4 தீவிரவாதிகளும்
தப்பி ஓடியதாக உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.