Show all

இந்தியாவின் அடுத்த குடியரசுத்தலைவராக அமிதாபச்சானா

இந்தியாவின் அடுத்த குடியரசுத்தலைவராக அமிதாபச்சான் பெயரை பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளதாக அமர் சிங் கூறியுள்ளார்.

இது குறித்து தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த அமர் சிங் கூறியதாவது:

இந்தியாவின் அடுத்த குடியரசுத்தலைவராக நியமிக்க அமிதாபச்சான் பெயரை பிரதமர் மோடி பரிந்துரை செய்ய திட்டமிட்டுள்ளார்.  பிரதமர் மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருக்கும் போது அமிதாபச்சான் நடித்த பா படம்  விழாவில் கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடிக்கு அமிதாபச்சானை  அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. பா பட விழாவில் குஜராத் தூதுவராக அமிதாபச்சான் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அவரிடம் கேட்டதாக அமர் சிங் கூறினார்.

 

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்படலாம் என  நடிகர் சத்ருகன் சின்ஹா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.