Show all

மேற்கு வங்காளத்தில் பரபரப்பு! மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சுட்டுக் கொலை

28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சத்யஜித் பிஸ்வாஸ் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ளது கிருஷ்ணகஞ்ச் சட்டமன்றத் தொகுதி. இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் சத்யஜித் பிஸ்வாஸ். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் சத்யஜித் பிஸ்வாஸ் புல்வாரியில் உள்ள தனது வீட்டின் அருகில் நடந்த கலைமகள் விழாவில் இன்று பங்கேற்றார்.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சத்யஜித் பிஸ்வாசை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்;துவர்கள், வரும் வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,059.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.