Show all

நீங்களும் சௌக்கிதார் ஆக விரும்பினால் மோடிக்கு வாக்களியுங்கள்! அரவிந்த் கெஜ்ரிவால்

06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியத் தலைமை அமைச்சர் மோடி குறித்து டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ள கீச்சுப் பதிவு தீயாகி வருகிறது. 

நான் நாட்டின் சௌக்கிதார் என அண்மையில் மோடி தேர்தல் கருத்துப் பரப்புதல் காணொளியில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து கீச்சுவில் தனது பெயரை சௌக்கிதார் நரேந்திர மோடி எனவும் மோடி மாற்றினார். 

மோடியை தொடர்ந்து கீச்சுவில் உள்ள பாஜகவில் அனைவரும் தங்கள் பெயருக்கு முன சௌக்கிதார் என சேர்த்து, கீச்சுவில் பெயர் மாற்றம் செய்தனர். இதற்கிடையில் எதிர்க்கட்சிகள் இதை வைத்து மோடியைக் கடுமையாக செய்து வருகின்றன.

மோடியை செய்யும் வேலையில், கெஜ்ரிவாலும் இணைந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள கீச்சுப் பதிவில், மோடி, ஒட்டுமொத்த நாட்டையும் சௌக்கிதார் ஆக்க விரும்புகிறார். நீங்களும் உங்கள் குழந்தைகளை சௌக்கிதார் ஆக்க விரும்பினால் மோடிக்கு வாக்களியுங்கள். 

ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிக்க விரும்பினால், அவர்களை மருத்துவர்கள், பொறியாளர்கள், தொழல் அதிபர்கள் ஆக்க விரும்பினால், எல்லோரும் சௌக்கிதார் இல்லாமல் அவரவர் ஈடுபட்ட துறைகளில் மக்களை முன்னேற்ற கட்சிப் பொறுப்பாற்றி வரும் ஆம்ஆத்மி வேட்பாளர்களுக்கு ஓட்டளியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

ஹிந்தி சொல் சௌக்கிதார் என்றால் ஆங்கிலத்தில் வாட்ச்மேனாம், தமிழில் காவலாளியாம். இப்படியெல்லாம் ஹிந்தி திணிப்பா மோடி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,097.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.