Show all

பாராளுமன்ற உறுப்பினர் விட்டால் ரடாடியா மனு கொடுக்க வந்தவரை உதைக்கும்

குஜராத் மாநிலம் போர்பந்தர் தொகுதி பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் விட்டால் ரடாடியா, மத சார்பான நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது

ஒரு முதியவர் அவரிடம் மனு கொடுக்க வந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் விட்டால் ரடாடியா அவரை பல முறை காலால் எட்டி உதைத்தார். இது காணொளியாகப் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு , சுங்கச்சாவடியில் பணம்கேட்டவரை துப்பாக்கி முனையில் மிரட்டியவர் இதே ராடாடியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.