Show all

மோடி இதழியலாளர்களின் குரல்வளைக்கு போட்டுள்ள பூட்டை நான் உடைத்தெறிவேன்! இராகுல் உறுதி

நீங்கள் (இதழியலாளர்கள்) உங்கள் மனதில் இருப்பதை சொன்னால், தலைமைஅமைச்சர் மோடி உங்களை அடிப்பார். நீங்கள் கவலைப்படாதீர்கள், இந்த தேர்தலில் மோடி வெளியே சென்றுவிடுவார். நாங்கள் வந்ததும் நீங்கள் விரும்புவதை எழுதலாம். இவ்வாறு இராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.

10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: காவலாளிதான் திருடன் என்பதான தீர்ப்பை, மக்கள் அறங்கூற்றுமன்றம் வாசிப்பதற்கு, அடுத்த மாதம் இதே நாள் வரை மட்டுமே காத்திருந்தால் போதும். இவ்வாறு ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆம் அந்த இனிய நாளில், தாமரை 'வணிகமுத்திரை' காவலாளி (நரேந்திர மோடி) தான் திருடன் என்பதை மக்கள் அறங்கூற்றுமன்றம் முடிவு செய்யும். நியாயம் நிலைநிறுத்தப்படும். ஏழைகளின் பணத்தை திருடி தனது பணக்கார நண்பர்களுக்கு வழங்கியவர் தண்டனையை சந்திப்பார் என்று இராகுல் தெரிவித்துள்ளார்.
அமேதியில் நேற்று ராகுல் காந்தி இதழியலாளர்களுக்கு பேட்டி கொடுத்தபோது கூறியதாவது:-
மோடி நேர்மையானவராக இருந்தால், ரபேல் ஒப்பந்தத்தில் அவர் ஒன்றும் செய்யவில்லை என்றால், அவர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க பயப்படத் தேவையில்லை. அவர் என்னுடன் 15 நிமிடம் மட்டும் அவர் முடிவு செய்யும் இடத்திலேயே நேருக்கு நேர் விவாதிக்கட்டும். பின்னர் நாட்டு மக்கள் காவலாளியின் உண்மையான முகத்தை தெரிந்து கொள்வார்கள்.
இந்தப் பிரச்சினை குறித்து வேறு எதுவும் நான் கூற விரும்பவில்லை. நீங்கள் (இதழியலாளர்கள்) உங்கள் மனதில் இருப்பதை சொன்னால், தலைமைஅமைச்சர் உங்களை அடிப்பார். நீங்கள் கவலைப்படாதீர்கள், இந்தத் தேர்தலில் மோடி வெளியே சென்றுவிடுவார். நாங்கள் வந்ததும் நீங்கள் விரும்புவதை எழுதலாம். இவ்வாறு அவர் கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,131.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.