ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இதில் நேபாளத்தை சேர்ந்த மிலன்தெகல் (29) என்பவர் சப்ளையராக பணிபுரிந்தார். பணியின்போது ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அவர் சரிவர ஆங்கிலம் பேசவில்லை என மேலாளர் நிகோலஸ் சர்மா குற்றம் சாட்டினார். அதற்கு அபராதமாக மிலன் தெகலின் சம்பளத்தின் ஒரு பகுதியை வழங்காமல் பிடித்துக் கொண்டார். இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள தொழிற்சாலை ஒழுங்கு முறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மிலன்தெகலுக்கு ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் நஷ்டஈடு வழங்கும்படி ஓட்டல் உரிமையாளருக்கு உத்தரவிட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.