Show all

மனஅழுக்கை எப்படிக் கழுவப் போகிறார் முன்னாள் சமஉ ராஜூகேஜ்! 100முறை குளித்தாலும் மோடியைப் போல சிவப்பாக முடியாதாம்

நூறுமுறை குளித்தாலும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கருப்பாகத்தான் இருப்பார் எனவும் மோடியைப் போல சிவப்பாக முடியாது எனவும்- கர்நாடக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜூகேஜ் தனது அசிங்கம் பிடித்த மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
 05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: படக்கருவிக்கு 
முன் தோன்றுவதற்கு முன்னர் மோடி ஒப்பனை செய்து கொள்வதாகவும், நாளொன்றுக்கு 10 ஆடைகளை அவர் மாற்றிக் கொள்வதாகவும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி விமர்சித்திருந்தார். 
இதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு பேசியுள்ள, கக்வாத் தொகுதியின் பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜூகேஜ், 'மோடி பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், நன்றாகவும் இருக்கிறார். அதனால் அவர் ஒப்பனை செய்து கொள்வதில்லை. கருப்பாக இருக்கும் குமாரசாமி, 100 முறை குளித்தாலும் கருப்பாகத்தான் இருப்பார்'' என ராஜூ கேஜ் கூறியுள்ளார். அவரின் இந்த வக்கிரத்தின் பாற்பட்ட அசிங்கம் பிடித்த விமர்சனம் கர்நாடக மக்களிடையே பாஜகவினர் மீதான அருவருப்பை ஏற்படுத்தியுள்ளது
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,126.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.