ஹஜ் பயணிகளிடம் ரூ.2.5 கோடி அளவுக்கு மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் கன்னட நடிகை மரியா சூசைராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். மாடல் அழகியாக இருந்து கன்னட திரைப்படத்தில் நடிகையான மரியா சூசைராஜ், மும்பையில் உள்ள பரோமிதா என்பவருடன் சேர்ந்து குஜராத்தில் ஹஜ் யாத்திரைக்கான டிக்கெட் புக்கிங் ஏஜென்சியைத் துவக்கினார். டிக்கெட்டை முன்பதிவு செய்ய பல ஆயிரம் பணம் கட்டிய பயணிகளின் டிக்கெட்டை அவர்களுக்குத் தெரியாமல் ரத்து செய்து, அதன் மூலம் கிடைத்த ரூ.2.68 கோடி பணத்தை மோசடி செய்துள்ளார். இது குறித்து ஏமாந்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், மைசூரில் பதுங்கியிருந்த மரியாவை, அகமதாபாத் காவல்துறையினர் கைது செய்தனர். ஏற்கனவே, மும்பை நிகழ்ச்சி தயாரிப்பாளர் நீரஜ் குரோவ் கொலை வழக்கில் ஆதாரங்களை அழித்த குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று 2011ம் ஆண்டுதான் மரியா சிறையில் இருந்து விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.