Show all

தலைக்கவசம்! வண்டியில் போட மறுக்கும் பயணிகள்- வங்கியில் போட்டு வந்து திருடும் கொள்ளையர்கள்.

கண்காணிப்பு படக்கருவியில் பதிவான காட்சிகள்: ஐசிஐசிஐ வங்கிக்கு தலைக்கவசம் அணிந்து வந்து திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள்.

19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஐசிஐசிஐ வங்கிக் கிளைக்கு, தலைக்கவசம் அணிந்த வந்த 6 பேர் கொண்ட கும்பல், துப்பாக்கியை காட்டி மிரட்டி 8 லட்சம் ரூபாய் பணத்தைத் திருடிக் கொண்டு தப்பியது. இந்தக் காட்சிகள் வங்கியின் கண்காணிப்பு படக்கருவியில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து வங்கி மேலாளர் கோபர்சாஹி கூறுகையில், ‘முகம் மறைக்கும் தலைக்கவசம் அணிந்து வந்த 6 பேர் திடீரென வங்கிக்குள் நுழைந்தனர். அப்போது வங்கியில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்தனர். உள்ளே வந்த 6 பேர் கொண்ட கும்பல் சில நிமிடங்களில் காசாளர்களிடம் இருந்து ரூ.8,05,115 லட்சம் பணத்தையும் பாதுகாவலர்களிடம் இருந்த துப்பாக்கியையும் பறித்துச் சென்றனர்.’ என்றார்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரில் மூவர் 18 அகவைக்கும் குறைவானவர்கள் என்றும், இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,297.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.