Show all

வளரும் நல்லெண்ண அடிப்படைகள்! பாஜகவிற்கு சங்கு ஊதப்படுவதை உறுதிப் படுத்துகிறது

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தாமல் இருக்க காங்கிரஸ் திட்டம்

உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும் கூட்டணி அமைத்திருக்கின்றன. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

எனினும், காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. மரியாதை நிமித்தமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் காங்கிரசும் தமது வேட்பாளர்களை நிறுத்தாமல் விடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

இதனை அறிந்த ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவர் அஜீத்சிங், தமது தொகுதியிலும், தனது மகன் ஜெயந்த் சவுத்ரி போட்டியிடும் தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தாமல் இருக்குமாறு காங்கிரஸிடம் கோரி வருகிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,091.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.