Show all

பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை

பாலில் கலப்படம் செய்வதால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும், எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு, பாலில் கலப்படம் செய்வது குறித்து கவலை தெரிவித்தது. பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில்தான் தற்போது சட்டம் உள்ளது என்று கூறிய நீதிபதிகள், பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில், நடுவண் மாநில அரசுகள் சட்ட திருத்தம் கொண்டு வருவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.