Show all

இலங்கையில் கண்டுபிடிப்பு! இரும்புக் கம்பிகளால் கைகள் கட்டப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடு

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையின் மன்னார் பகுதியில் மனிதப் புதைகுழியில் நடைபெற்று வரும் அகழ்வு பணியில் இருந்து, இரண்டு கைகளும் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மன்னார் பகுதியில் மனிதப் புதைகுழியில் நடைபெற்று வரும் அகழ்வு பணியில் இருந்து, இரண்டு கைகளும் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மனித புதைகுழியிலிருந்து பெண்ணின் மோதிரம் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து சந்தேகத்திற்கிடமான மனித எலும்புக்கூடுகள் மற்றும் தடயப் பொருட்கள் மீட்கப்பட்டு வருவது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,994.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.